மனைவிக்கு தீ வைத்த கணவருக்கு மறியல்
மனைவியை தீயூட்டு கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கணவனை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பதில் நீதவான் கே. ஜி.குணதாச உத்தரவிட்டுள்ளார்.
கட்டானை, ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த அந்தோனிலாகே யூட் குமார என்ற நபரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி, வெளிநாடொன்றில் பணியாற்றிவிட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார். கடந்த, புதன்கிழமை இரவு, 11 மணியளவில் சந்தேக நபர், மனைவி தீ மூட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும், தீக்காயங்களுக்கு உள்ளான 34 வயதுடைய பெண், அயலவர்களின் உதவியுடன், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ தினத்தன்று, சந்தேகநபரை கைது செய்த கொச்சக்கடை பொலிஸார், அவரை, மன்றில் ஆஜர்செய்த போதே, நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மனைவிக்கு தீ வைத்த கணவருக்கு மறியல்
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:




